ஜம்மு காஷ்மீர்: பேருந்து விபத்தில் 36 பேர் பலி


ஜம்மு காஷ்மீர்: பேருந்து விபத்தில் 36 பேர் பலி
x

விபத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜம்மு,

ஜம்மு காஷ்மீர் மாநிலம், கிஷத்வார் என்ற பகுதியில் இருந்து ஜம்முவிற்கு ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து, தோடா என்ற பகுதியில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 36 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தோருக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்புப்பணி நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.

விபத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்றும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.


Next Story