வங்கிகளுக்கு மீண்டும் 4 நாட்கள் தொடர் விடுமுறை


வங்கிகளுக்கு மீண்டும் 4 நாட்கள் தொடர் விடுமுறை
x
தினத்தந்தி 24 Jan 2024 9:30 AM GMT (Updated: 24 Jan 2024 10:24 AM GMT)

வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.

சென்னை,

தேசிய வங்கிகள், தனியார் துறை வங்கிகளுக்கு தை பூசத்தை முன்னிட்டு நாளையும், குடியரசு தினத்தையொட்டி நாளை மறுநாளும், அதைத்தொடர்ந்து நான்காவது சனி மற்றும் ஞாயிறு என 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே ஏடிஎம்களில் பணம் எடுப்போர், வங்கிகளில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வோர், இன்று மாலைக்குள் மேற்கொள்வது நல்லது.

வங்கிகள் விடுமுறை என்றாலும், மக்கள் பெரியளவில் பாதிக்கப்படுவதில்லை. தற்போது மொபைல் செயலிகள் மற்றும் மொபைல் வங்கிச் சேவைகள் என பல வழிகளில் டிஜிட்டல் பண பரிவார்த்தனைகளை மேற்கொள்வதால் பணம் எடுப்பது சுலபமாகிவிட்டது.


Next Story