சத்தீஷ்காரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை


சத்தீஷ்காரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
x

சத்தீஷ்காரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 8 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

சத்தீஷ்கார்,

சத்தீஷ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக உள்ளது. இதனால், கங்களூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லெந்த்ரா கிராமத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் இன்று காலை 6 மணியளவில் பாதுகாப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் நக்சலைட்டுகளுக்கு எதிராக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் 8 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்து நக்சலைட்டுகளின் உடல்கள் மற்றும் துப்பாக்கி, ஆயுதங்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டன. மேலும் அப்பகுதியில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பிஜப்பூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தார் பகுதியில் பாதுகாப்புப் படையினருடனான என்கவுன்டர்களில் இந்த ஆண்டு இதுவரை 41 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அம்மாவட்ட ஐ.ஜி. கூறினார்.


Next Story