கள்ளத்தொடர்பை கண்டித்த கணவர்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்டிய மனைவி


கள்ளத்தொடர்பை கண்டித்த கணவர்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்டிய மனைவி
x
தினத்தந்தி 10 April 2024 5:28 AM GMT (Updated: 10 April 2024 9:42 AM GMT)

கொலை நடந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது குற்றவாளிகள் 3 பேர் பிடிபட்டு உள்ளனர்

மும்பை,

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் விரார் பாலிவாலி கிராமத்தில் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3-ந்தேதி கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் உடல் ஒன்று மீட்கப்பட்டது. இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், கொலையுண்டவர் இம்ரான் என தெரியவந்தது. இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் போலீசாரின் விசாரணையில், இந்த கொலையில் நாலாச்சோப்ரா பெல்கார் பகுதியை சேர்ந்த பரன் சாவ்(வயது50) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

அதாவது இம்ரானின் மனைவிக்கும், பரன் சாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த இம்ரான் மனைவியை கண்டித்து உள்ளார். மேலும் கள்ளக்காதலனையும் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பரன் சாவ், இம்ரானை கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக தனது நண்பர்கள் அப்துல் முபாரக் அலி, பத்தா ஆகியோரின் உதவியை நாடினார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று பரன் சாவ் நண்பர்களுடன் சேர்ந்து இம்ரானை ஆட்டோவில் நாலாச்சோப்ராவுக்கு கடத்தி சென்றனர். அங்கு வைத்து அவரை கொலை செய்து உடலை விரார் பாலிவாலி கிராமத்தில் வீசிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இந்த கொலை நடந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது குற்றவாளிகள் 3 பேர் பிடிபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story