கேரளாவில் படகு விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு


கேரளாவில் படகு விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு
x

சொகுசு படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்-பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சொகுசு படகில் 40 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மீட்கப்பட்டவர்களை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுப்பிவைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சொகுசு படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததோடு நிவாரணமும் அறிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

"கேரள மாநிலம் மலப்புரத்தில் படகு கவிழ்ந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.




Next Story