திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது


திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 20 Feb 2024 4:28 AM GMT (Updated: 20 Feb 2024 4:44 AM GMT)

மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது சிறுமி 4 மாதங்கள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

காரைக்கால்,

காரைக்கால் எம்.ஜி.ஆர்.நகர் அம்மன் கோவில்பத்தை சேர்ந்தவர் முகமது அலி (வயது 27). கூலித்தொழிலாளி. இவர் நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அந்த சிறுமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்தபோது சிறுமி 4 மாதங்கள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காரைக்கால் நகர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முகமது அலியை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story