விவசாயிகளுக்கு மத்திய அரசு அநீதி இழைக்கிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு


விவசாயிகளுக்கு மத்திய அரசு அநீதி இழைக்கிறது - காங்கிரஸ் குற்றச்சாட்டு
x

எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கியுள்ள மத்திய அரசு விவசாயிகளுக்கு அநீதி இழைக்கிறது என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

டெல்லி,

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லி எல்லையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் விவசாயிகள் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

விவசாயிகள் போராட்டத்தை தடுக்க டெல்லி எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்புகளை மீறி விவசாயிகள் டெல்லி எல்லைக்குள் நுழைய முயன்ற நிலையில் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். விவசாயிகள் - போலீசார் இடையேயான மோதலால் டெல்லி எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், விவசாயிகளுக்கு மத்திய அரசு அநீதி இழைப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், 'கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சிறந்த விவசாய தலைவரான சரண் சிங்கிற்கும், பசுமை புரட்சியின் தந்தையான சுவாமிநாதனுக்கும் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கியுள்ளது. நாங்கள் அந்த முடிவை வரவேற்கிறோம். ஆனால், மிகச்சிறந்த இரு தலைவர்களுக்கு பாரத ரத்னா அறிவித்துள்ள மத்திய அரசு விவசாயிகளுக்கு அநீதி இழைக்கிறது. விவசாயிகளுக்கு அளித்த உத்தரவாதங்களை மோடி அரசு நிறைவேற்றவில்லை. விவசாயிகளுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்' என்றார்.


Next Story