சத்தீஸ்காரில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிப்பு: சுட்டெரிக்கும் வெயிலால் நடவடிக்கை


சத்தீஸ்காரில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிப்பு: சுட்டெரிக்கும் வெயிலால் நடவடிக்கை
x

கோப்புப்படம்

சுட்டெரிக்கும் வெயில் காரணமாக சத்தீஸ்காரில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ராய்ப்பூர்,

சத்தீஸ்காரில் கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் 16-ந்தேதி (நாளை) திறக்கப்படுவதாக இருந்தது.

ஆனால் மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. அத்துடன் வெப்ப அலையும் நீடிப்பதால் மக்கள் பெரும் துயருக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை மாநில அரசு தள்ளி வைத்திருக்கிறது. அதன்படி வருகிற 26-ந்தேதி வரை கோடை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்து உள்ளது.

முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக மாநில பள்ளிக்கல்வித்துறை விரைவில் அறிவிப்பு வெளியிடும் எனவும் மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story