உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதாக கூறி காங்கிரஸ் தலைவர்கள் பணம் சம்பாதித்தனர்- அமித் ஷா குற்றச்சாட்டு


உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதாக கூறி காங்கிரஸ் தலைவர்கள் பணம் சம்பாதித்தனர்- அமித் ஷா குற்றச்சாட்டு
x

Image Tweeted By @AmitShah 

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார்.

அகமதாபாத்,

குஜராத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக இங்கு பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. இருப்பினும் இந்த முறை குஜராத்தில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன.

இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார். நேற்று முதல் அங்கு பல்வேறு நலத்திட்டங்களுக்கு அமித் ஷா அடிக்கல் நாட்டி வருகின்றார். இந்த நிலையில் இன்று காந்திநகர் மாவட்டத்தில் உள்ள கலோல் நகரில் நல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டத்தில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அமித் ஷா, 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, மருத்துவக் கல்வி வசதிகளை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் காங்கிரஸ் தலைவர்கள் பணம் சம்பாதித்ததாகக் குற்றம் சாட்டினார்.

மருத்துவர்கள் இல்லாமல் மருத்துவ உள்கட்டமைப்புகளை மட்டும் மேம்படுத்துவதில் என்ன அர்த்தம் என அவர் கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, இந்த சூழ்நிலையை மேம்படுத்தப்பட்டதாக அமித் ஷா தெரிவித்தார்.

அமித் ஷா மேலும் பேசுகையில், "ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 60 கோடி ஏழைக் குடிமக்கள் இப்போது இலவச சிகிச்சையைப் (ரூ. 5 லட்சம் வரை) பெறுகின்றனர். மேலும், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த தேவையான சுகாதார உள்கட்டமைப்பை அமைக்க பிரதமர் மோடிரூ. 64 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் 600 மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் 35 ஆயிரம் புதிய படுக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன" என்றார்.


Next Story