மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து நீக்கம்


மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து நீக்கம்
x

காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து குல்தீப் பிஷ்னோய் நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

சண்டிகர்,

அரியானாவில் மாநிலங்களவை தேர்தலில் ஆதம்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. குல்தீப் பிஷ்னோய், காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மாக்கெனுக்கு வாக்களிக்காமல், சுயேச்சை வேட்பாளர் கார்த்திகேய சர்மாவுக்கு வாக்களித்தார். கார்திகேய சர்மாவுக்கு பா.ஜ.க. மற்றும் ஜனாயக் ஜனதா ஆகிய கட்சிகள் ஆதவளித்துள்ளன.

அரியானாவில் காங்கிரஸ் வெற்றி பெற 31 எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டிய நிலையில், குல்தீப் பிஷ்னோய் மாற்றி வாக்களித்துள்ளார். மேலும் மற்றொருவரது வாக்கு ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் அரியானாவில் மாநிலங்களவை தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சி, மாற்றி வாக்களித்த குல்தீப் பிஷ்னோயை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது. இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காங்கிரஸ் செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளர் பதவி உள்பட கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் குல்தீப் பிஷ்னோய் நீக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story