தெலுங்கானாவில் தொடர் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை


தெலுங்கானாவில் தொடர் கனமழை:  பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
x

தெலுங்கானாவில் தொடர் கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானாவில் தொடர் மழை பெய்து வருகிறது. தலைநகர் ஐதராபாத் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் தவிக்கும் மக்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அவை வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் பல நீர்த்தேக்கங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் முக்கிய ஆறுகளில் வெள்ளம் அபாய அளவை தாண்டி செல்கிறது. கரையோர பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

இந்த நிலையில் தெலுங்கானாவில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த மாநில கல்வித்துறை மந்திரி சபிதா இந்திரா ரெட்டி அறிவித்துள்ளார். கனமழை காரணமாக தெலுங்கானாவில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story