மூதாட்டி அடித்துக் கொலை


மூதாட்டி அடித்துக் கொலை
x

பெங்களூரு அருகே மூதாட்டி அடித்து கொலை செய்த பெண் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாபுரா தாலுகா சிக்கமுத்தனேஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடப்பா. இவரது மனைவி கங்கம்மா(வயது 65). விவசாயியான வெங்கடப்பா அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வந்தார்.

இந்த நிலையில் அரசு பணிகளை ஒப்பந்தம் எடுப்பது தொடர்பாக வெங்கடப்பாவுக்கும், சுதாகர் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வெங்கடப்பா வெளியே சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்த சுதாகர், தனது உறவினர்களான மாருதி, சின்னக்கா உள்பட 4 பேர் சேர்ந்து கங்கம்மாவை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் படுகாயமடைந்த கங்கம்மா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தொட்டபள்ளாபுரா புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுதாகர் உட்பட 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story