இந்தியா போரை விரும்பாத நாடு... ஆனால் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயார் - பாதுகாப்புத்துறை மந்திரி


இந்தியா போரை விரும்பாத நாடு... ஆனால் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயார் - பாதுகாப்புத்துறை மந்திரி
x

இந்தியா போரை விரும்புவதில்லை... ஆனால், போருக்கு தூண்டப்பட்டால் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயார் என்று பாதுகாப்புத்துறை மந்திரி கூறினார்.

இட்டாநகர்,

லடாக், அருணாச்சலபிரதேசம், சீக்கிம் உள்பட எல்லை மாநிலங்களில் சாலை, பாலம் உள்பட 28 எல்லை உள்கட்டமைப்பு திட்டங்களை அருணாச்சலபிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாட்டிற்கு அர்பணித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத்சிங், இந்தியா போரை விரும்பாத நாடு. மேலும், அண்டை நாடுகளுடன் அன்பான உறவை மேம்படுத்தவே விரும்புகிறது. இந்த தத்துவம் கடவுள் ராமர் முதல் கடவுள் புத்தரின் போதனைகள் வரை நமது மரபில் பெறப்பட்ட தத்துவம்.

போருக்கு தூண்டப்பட்டால் எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. எல்லையில் எத்தகையை சவால்களையும் எதிர்கொள்ளும் திறன் இந்திய ராணுவத்திற்கு உள்ளது' என்றார்.


Next Story