முதல்- மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறாரா நிதிஷ்குமார் ?


முதல்- மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறாரா நிதிஷ்குமார் ?
x

பீகார் மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர்களுடன் நிதிஷ் குமார் தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பீகார்,

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியிலிருந்து வெளியேறவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதன் காரணமாக பீகார் மாநில அரசியல் மற்றும் தேசிய அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் பீகார் மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர்களுடன் நிதிஷ் குமார் தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார். இதைப்போலவே ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோரும் தங்கள் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணியை முறித்து கொண்டு பாஜகவுடன் கைக்கோர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜினாமா செய்த பின்னர் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து மீண்டும் முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story