காஷ்மீரில் பயங்கரவாதிகளின் மறைவிடம் அழிப்பு - பாதுகாப்பு படையினர் அதிரடி


காஷ்மீரில் பயங்கரவாதிகளின் மறைவிடம் அழிப்பு - பாதுகாப்பு படையினர் அதிரடி
x

கோப்புப்படம்

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை பாதுகாப்பு படையினர் அழித்தனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் ஆண்டன் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை துப்பாக்கியால் சுட்டனர். அதனை தொடர்ந்து அவர்களுக்கு பாதுகாப்பு படையினர் தக்க பதிலடி கொடுத்தனர்.

இரு தரப்புக்கும் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. பாதுகாப்பு படையினரின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாத பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதையடுத்து அங்கு சோதனை நடத்தியதில் குகை போன்ற வடிவில் இருந்த பயங்கரவாதிகளின் மறைவிடத்தை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.

பின்னர் அந்த மறைவிடத்தை பாதுகாப்பு படையினர் அழித்தனர்.


Next Story