கேரளா: உணவகத்தில் சிற்றுண்டி சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு - உணவில் புழுக்கள் கிடந்ததால் அதிர்ச்சி


கேரளா: உணவகத்தில் சிற்றுண்டி சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு - உணவில் புழுக்கள் கிடந்ததால் அதிர்ச்சி
x

அதிகாரிகள் உணவகத்தில் நடத்திய சோதனையின் போது, உணவில் உயிரிழந்த புழுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் 25 பேர், ஆசிரியர்கள் 8 பேர் உள்ளிட்டோர் இடுக்கி மாவட்டம் வாகமன் பகுதிக்கு சுற்றுலா சென்றனர். அப்போது அங்குள்ள தனியார் உணவகம் ஒன்றில் சிற்றுண்டி சாப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் மாணவர்கள் 6 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர்.

அதிகாரிகள் உணவகத்தில் நடத்திய சோதனையின் போது, உணவில் உயிரிழந்த புழுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து உணவகத்தை மூடிய அதிகாரிகள், கடை உரிமையாளர்களிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story