மராட்டியத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜேந்திர சுகானந்த் பட்னி மறைவு: ஜே.பி.நட்டா இரங்கல்


மராட்டியத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜேந்திர சுகானந்த் பட்னி மறைவு: ஜே.பி.நட்டா இரங்கல்
x

மராட்டியத்தில் ராஜேந்திர சுகானந்த் பட்னி 1997 முதல் 2003 வரை சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார்.

மும்பை,

மராட்டிய மாநில பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. ராஜேந்திர சுகானந்த் பட்னி இன்று காலமானார். 59 வயதான அவர் நீண்டகாலமாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவர் 1997 முதல் 2003 வரை சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார். மேலும் இவர் 2004, 2014 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தல்களில் விதர்பா பிராந்தியத்தில் பா.ஜ.க. கோட்டையான கரஞ்சா தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார்.

இவரது மறைவுக்கு பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மராட்டிய பா.ஜ.க. தலைவர் சந்திரசேகர் பவான்குலே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மந்திரிகள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Next Story