போர் நிறுத்தம் தொடர்பாக புதின் மற்றும் ஜெலென்ஸ்கியிடம் பேசினார் பிரதமர் மோடி - ராஜ்நாத் சிங் தகவல்


போர் நிறுத்தம் தொடர்பாக புதின் மற்றும் ஜெலென்ஸ்கியிடம் பேசினார் பிரதமர் மோடி - ராஜ்நாத் சிங் தகவல்
x

உக்ரைனில் போர் நிறுத்தம் தொடர்பாக புதின் மற்றும் ஜெலென்ஸ்கியிடம் பிரதமர் மோடி பேசியதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

அவுரங்காபாத்,

உக்ரைனில் இருந்து ரஷியா போரினால் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்களை வெளியேற்றுவதில் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய பங்காற்றியதாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இதுதொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் வீர ஷிரோமணி மகாராணா பிரதாப் மகா சம்மேளனத்தில் உரையாற்றிய அவர், "உக்ரைனில் போர் நிறுத்தம் தொடர்பாக பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பேசினார். தேவைப்படும்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனும் பேசினார். உக்ரைனில் சிக்கிஇருந்த 22,000க்கும் மேற்பட்ட மாணவர்களை மீட்கும் வகையில் போர் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் மாணவர்கள் வீடு திரும்பினர். முன்னதாக மாணவர்களை காப்பாற்ற வேண்டும் என்று அவர்களது பெற்றோர்கள் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். வேறு எந்த நாட்டிலும் செய்ய முடியாத ஒன்றைச் செய்த பிரதமர் மோடி குறித்து நான் பெருமைப்படுகிறேன்.

மோடி பிரதமராக இருந்தபோது, 2014ல் 900 கோடி ரூபாயாக இருந்த இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி, தற்போது 16,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நாட்டை ஆத்மநிர்பர் (தன்னம்பிக்கை) கொண்டதாக மாற்ற வேண்டும் என்ற மோடியின் வலியுறுத்தலுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும் " என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.


Next Story