ம.பி: பட்டாசு ஆலை விபத்து; பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு


ம.பி: பட்டாசு ஆலை விபத்து; பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு
x
தினத்தந்தி 6 Feb 2024 5:01 PM IST (Updated: 6 Feb 2024 6:00 PM IST)
t-max-icont-min-icon

இந்த வெடி விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா நகரில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. மேலும் ஆலையில் உள்ள பட்டாசுகள் அனைத்தும் வெடிக்க தொடங்கின. இந்த கோர வெடி விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினார் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு போலீசார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் பற்றி விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் ஆலைக்குள் மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பாக மத்திய பிரதேச முதல்-மந்திரி மோகன் யாதவ், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். மேலும் மந்திரி உதய் பிரதாப் சிங், கூடுதல் தலைமைச் செயலாளர் அஜித் கேசரி மற்றும் இயக்குநர் ஜெனரல் ஹோம் கார்டு அரவிந்த் குமார் ஆகியோரை ஹெலிகாப்டர் மூலம் ஹர்தாவுக்கு விரைந்து செல்லுமாறு முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் வழங்க முதல்-மந்திரி மோகன் யாதவ் உத்தரவிட்டுள்ளார். மேலும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ அருகிலிருந்த குடியிருப்புகளுக்கும் பரவத் தொடங்கியதால் அங்குப் பதற்றம் நிலவி வருகின்றது. இந்த தொடர்பாக விசாரணை நடந்த 6 பேர் கொண்ட குழுவை மத்திய பிரதேச அரசு நியமித்துள்ளது.

1 More update

Next Story