மக்களுக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை -மத்திய அரசு மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு


மக்களுக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை -மத்திய அரசு மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு
x

மக்களுக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்று மத்திய அரசை ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ராய்ப்பூர்,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் யாத்திரை நடத்தி வருகிறார். யாத்திரை தற்போது சத்தீஷ்கர் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சத்தீஷ்கரின் கர்பா மாவட்டத்தில் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டார். அப்பகுதியில் நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பேசிய ராகுல்காந்தி, பொதுமக்களின் பைகளில் உள்ள பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. மத்திய பா.ஜ.க. அரசின் ஆட்சியில் மக்களுக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. மக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், பட்டியலினத்தினர் 74 சதவிகிதம் உள்ளனர். ஆனால், இந்த சமூகத்தை சேர்ந்த யாரும் நாட்டின் முதல் 200 நிறுவனங்களில் தலைவராகவோ, நிர்வாக அதிகாரியாகவோ இல்லை' என்றார்.


Next Story