உத்தர பிரதேச உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க வெற்றி - பிரதமர் மோடி வாழ்த்து


உத்தர பிரதேச உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க வெற்றி - பிரதமர் மோடி வாழ்த்து
x

உத்தர பிரதேச உள்ளாட்சி தேர்தலில் பெற்ற அமோக வெற்றிக்காக பாஜக தொண்டர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று அதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு, மேயர் பதவிக்கான அனைத்து 17 மாநகராட்சி தேர்தலிலும் வெற்றி பெற்று உள்ளது. இதுதவிர நகராட்சி தலைவர் தேர்தலில் 90 இடங்களிலும் மற்றும் 600 வார்டுகளிலும் அக்கட்சி வெற்றி பெற்று உள்ளது.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் பெற்ற அமோக வெற்றிக்காக உத்தர பிரதேச பாஜக தொண்டர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "உள்ளாட்சி தேர்தலில் பெற்ற அமோக வெற்றிக்காக உத்தர பிரதேச பாஜக தொண்டர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த வெற்றி யோகி ஆதித்யநாத் தலைமையில் மாநிலத்தில் நடைபெற்று வரும் வரலாறு காணாத வளர்ச்சிக்கான மக்களின் ஆதரவை வெளிப்படுத்துகிறது" என்று கூறியுள்ளார்.


Next Story