தெலுங்கானாவின் புதிய முதல்-அமைச்சராக ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்பு


தெலுங்கானாவின் புதிய முதல்-அமைச்சராக ரேவந்த் ரெட்டி இன்று பதவியேற்பு
x

ஐதராபாத்தில் உள்ள எல்.பி. விளையாட்டரங்கில் மதியம் 1 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

சென்னை,

தெலுங்கானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிர சமிதியை ஆட்சியில் இருந்து அகற்றியுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் சட்டசபை கட்சித் தலைவராகவும், தெலுங்கானாவின் அடுத்த முதல்-அமைச்சராகவும் அந்த கட்சியின் மாநில தலைவர் ஏ.ரேவந்த் ரெட்டியை கட்சி தலைமை நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் 56 வயதாகும் ரேவந்த் ரெட்டி இன்று தெலுங்கானாவின் புதிய முதல்-அமைச்சராக இன்று பதவியேற்கவுள்ளார். இந்த பதவியேற்பு விழா ஐதராபாத்தில் உள்ள எல்.பி. விளையாட்டரங்கில் மதியம் 1 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் நேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்களை ரேவந்த் ரெட்டி சந்தித்தார். மேலும் முதல்-அமைச்சர் பதவியேற்பு விழாவில் சோனியா காந்தி கலந்து கொள்ளக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


Next Story