இமாச்சலப்பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவு

இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
ஷிம்லா,
இமாச்சலப்பிரதேசத்தில் சம்பா மாவட்டத்தில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 1.16 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 9 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால், சம்பா மாவட்டத்தில் சில இடங்களில் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





