இந்தியாவில் தேடப்படும் சாகிர் நாயக் கத்தார் உலகக்கோப்பையில் பங்கேற்பு - மத்திய அரசின் நடவடிக்கை என்ன?


இந்தியாவில் தேடப்படும் சாகிர் நாயக் கத்தார் உலகக்கோப்பையில் பங்கேற்பு - மத்திய அரசின் நடவடிக்கை என்ன?
x

மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கை குறித்து மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி விளக்கம் அளித்துள்ளார்.

டெல்லி,

மத வெறுப்புணர்வு பேச்சு, பணமோசடி வழக்கில் இந்தியாவால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டவர் சாகிர் நாயக். இஸ்லாமிய மத போதகரான சாகிர் நாயக் இந்தியாவில் இருந்து தப்பியோடி மலேசியாவில் தஞ்சம் அடைத்தார். சாகிர் நாயக்கிற்கு மலேசியா நிரந்தர குடியுரிமை வழங்கியுள்ளது.

இதனிடையே, சாகிர் நாயக் கத்தார் நாட்டிற்கு சென்றுள்ளார். உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெற்றுவரும் நிலையில் சாகிர் நாயக்கை கத்தார் சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளது.

கத்தாரில் சாகிர் நாயக் இஸ்லாமிய மத சொற்பொழிகளில் ஈடுபட உள்ளதாகவும், விளையாட்டு சேனல்களில் இஸ்லாமிய மத சொற்பொழிகளை சாகிர் நாயக் நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள சாகிர் நாயக் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் கத்தாருக்கு சிறப்பு விருந்தினராக சென்றிருப்பது தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கை குறித்து மத்திய மந்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், இந்த விவகாரத்தை இந்தியா கவனிக்கும்... மேலும், இந்த விவகாரத்தை கவனத்தில் கொள்ளும். ஆனால், சாகிர் நாயக் மலேசிய குடிமகன்.

சாகிர் நாயக் விவகாரத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் இந்தியாவின் நிலைப்பாடு கடுமையாக எடுத்துரைக்கப்படும்' என்றார்.


Next Story