பாதயாத்திரையின்போது உண்டியல் சேமிப்பை ராகுல்காந்தியிடம் அளித்த சிறுவன்


பாதயாத்திரையின்போது உண்டியல் சேமிப்பை ராகுல்காந்தியிடம் அளித்த சிறுவன்
x

பாதயாத்திரையின்போது தனது உண்டியல் சேமிப்பை சிறுவன் ஒருவன் ராகுல்காந்தியிடம் அளித்தான்.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தற்போது மத்தியபிரதேசத்தில் பாதயாத்திரை மேற்ெகாண்டுள்ளார். நேற்று அவருடன் யாஷ்ராஜ் பார்மர் என்ற சிறுவனும் நடந்து சென்றான்.

அப்போது, ''எல்லோரையும் அரவணைத்து செல்வதால், உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்'' என்று அவரிடம் கூறினான். பெற்றோர் அன்றாடம் அளிக்கும் பணத்தில், தான் சேமித்து வைத்த உண்டியலை ராகுல்காந்தியிடம் அளித்தான். நடைபயண செலவுக்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்தான். அதை ராகுல்காந்தி பெற்றுக்கொண்டார்.

இந்த வீடியோவை ராகுல்காந்தி தனது 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ''தியாகமும், சுயநலமின்மையும் குழந்தை பருவத்தில் உருவாக்கப்பட்ட நல்ல பண்புகள். இந்த உண்டியல், எனக்கு விலைமதிப்பில்லாதது. எல்லையில்லா அன்பின் பொக்கிஷம்'' என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.


Next Story