மங்களூரு; முதியவர் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை


மங்களூரு; முதியவர் உள்பட 2 பேர்  தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 13 Oct 2023 6:45 PM GMT (Updated: 13 Oct 2023 6:47 PM GMT)

மங்களூருவில் முதியவர் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

மங்களூரு-

பாகல்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டா (வயது23). இவர் தட்சிண கன்னடா மாவட்டம் சூரத்கல் பகுதியில் தங்கி அங்குள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில், நேற்று தங்கி இருந்த அறையில் மணிகண்டா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறையில் தங்கி இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் இதுகுறித்து சூரத்கல் போலீசிற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் மணிகண்டாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சூரத்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை.

இதுகுறித்து சூரத்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேப்போல், குடகு மாவட்டம் மடிகேரியை சேர்ந்த கோபாலா (64) என்பவர் தட்சிண கன்னடா மாவட்டம் தண்ணீர்பாவி பகுதிக்கு சுற்றுலா வந்தார்.

அவர் அங்குள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்று அங்குள்ள மரத்தில் கோபாலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து பனம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story