கார் கண்ணாடியை உடைத்து ரூ.13¾ லட்சம் திருட்டு


கார் கண்ணாடியை உடைத்து ரூ.13¾ லட்சம் திருட்டு
x

கார் கண்ணாடியை உடைத்து ரூ.13¾ லட்சம் திருடப்பட்டு சம்பவம் நடந்துள்ளது.

ஆனேக்கல்:

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா ஒன்னகலசபுரா கிராமத்தை சேர்ந்தவர் மோகன்பாபு. நேற்று இவர் நிலப்பத்திரம் முடிப்பதற்காக சர்ஜாபுராவை அடுத்த சோம்புரா கிராமத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு காரில் சென்றிருந்தார். அந்த காரில் ரூ.13.80 லட்சத்தை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மோகன்பாபு சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் ெசன்றிருந்தார். அப்போது மர்மநபர்கள் சிலர் அவரது கார் கண்ணாடியை உடைத்து சீட்டில் இருந்த பணத்தை திருடி சென்றனர். சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றிருந்த மோகன்பாபு திரும்பி வந்து பார்த்தபோது, பணம் திருடுபோயிருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே சர்ஜாபுரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மர்மநபர்கள் ரூ.13.80 லட்சத்தை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து வந்த 2 பேர் கார் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடி சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. இதுகுறித்து மோகன்பாபு கொடுத்த புகாரின் பேரில் சர்ஜாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


Next Story