குஜராத்தில் இருந்து வரும் ஜோடி சிங்கம்


குஜராத்தில் இருந்து வரும் ஜோடி சிங்கம்
x
தினத்தந்தி 27 Sep 2022 5:30 AM GMT (Updated: 27 Sep 2022 5:30 AM GMT)

மும்பையில் உள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்காவிற்கு குஜராத்தில் இருந்து வரும் ஜோடி சிங்கம்

மும்பை,

மும்பையில் உள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் பல்வேறு வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் உள்ள ஆண் மற்றும் பெண் புலி ஜோடியை குஜராத்திற்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக குஜராத்தில் இருந்து ஆண் மற்றும் பெண் சிங்க ஜோடியை மராட்டியம் பெறும் என்று மாநில வனத்துறை மந்திரி சுதிர் முங்கண்டிவார் நேற்று தெரிவித்தார்.

குஜராத்தில் இருந்து பெற்றப்படும் சிங்க ஜோடிகள் போரிவிலியில் உள்ள எஸ்.ஜி.என்.பி. பகுதியில் விடப்படும் என தெரிகிறது. இதுகுறித்து குஜராத் மாநில வனத்துறை இணை மந்திரி ஜெகதீஷ் விஸ்வகர்மாவுடன் முங்கண்டிவார் ஆலோசனை நடத்தினார். இந்த திட்டத்திற்கு மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திம் கூட்டாக ஒப்புதல் பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story