செங்கல்பட்டு அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது; ஒரு கிலோ பறிமுதல்

செங்கல்பட்டு அருகே கஞ்சா விற்ற 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
செங்கல்பட்டு அடுத்த வளர்குன்றம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடை அருகே சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த வினோத் (20) மற்றும் பிரதீஷ் குமார் (22) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





