இருவேறு சம்பவங்களில் ரெயில் மோதி 2 பேர் பலி


இருவேறு சம்பவங்களில் ரெயில் மோதி 2 பேர் பலி
x

திருவள்ளூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் ரெயில் மோதி பலியானார்கள்.

திருவள்ளூர்

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அந்த வழியாக தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதியதில் அவர் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரங்கள் தெரியவில்லை.

அதேபோல திருவள்ளூரை அடுத்த செவ்வாய்பேட்டை ரெயில் நிலையம் அருகே நேற்று சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இறந்த நபர் எந்த ஊர் என்ற விவரங்கள் தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story