தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 69 பேர் பலி: இதுவரையில் 1,898 பேர் சாவு


தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 69 பேர் பலி: இதுவரையில் 1,898 பேர் சாவு
x
தினத்தந்தி 11 July 2020 11:45 PM GMT (Updated: 11 July 2020 10:15 PM GMT)

தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 69 பேர் பலியாகினர். 4 மாவட்டங்களில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரையில் 1,898 பேர் இறந்து உள்ளனர்.

சென்னை, 

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 ஆயிரத்து 591 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரையில் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 915 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 46 ஆயிரத்து 410 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசு மருத்துவமனையில் 51 பேரும், தனியார் மருத்துவமனையில் 18 பேர் என மொத்தம் 69 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 26 பேரும், மதுரையில் 10 பேரும், காஞ்சீபுரத்தில் 4 பேரும், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தூத்துக்குடி, திருச்சியில் தலா 3 பேரும், செங்கல்பட்டு, கோவை, தேனியில் தலா இருவரும், விருதுநகர், நெல்லை, திருவாரூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், நீலகிரி, கரூர், கன்னியாகுமரி, கடலூர், அரியலூரில் தலா ஒருவரும் அடங்குவர். எனவே இதுவரையில் 1,898 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் 36 ஆயிரத்து 628 பேரின் தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. இதில் 3 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதுவரை 15 லட்சத்து 909 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து 4-வது நாளாக அனைத்து மாவட்டங்களில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதன்படி சென்னையில் 1,185 பேரும், திருவள்ளூரில் 346 பேரும், மதுரையில் 277 பேரும், செங்கல்பட்டில் 237 பேரும், தூத்துக்குடியில் 175 பேரும், சேலத்தில் 136 பேரும், வேலூரில் 135 பேரும், கன்னியாகுமரியில் 133 பேரும், திருச்சியில் 128 பேரும், தேனி, காஞ்சீபுரத்தில் தலா 119 பேரும், கள்ளக்குறிச்சியில் 102 பேரும், விருதுநகரில் 94 பேரும், ராமநாதபுரத்தில் 81 பேரும், நெல்லையில் 80 பேரும், கோவையில் 71 பேரும், சிவகங்கையில் 67 பேரும், தென்காசியில் 65 பேரும், திருவண்ணாமலையில் 64 பேரும், ராணிப்பேட்டையில் 50 பேரும், விழுப்புரத்தில் 44 பேரும், ஈரோட்டில் 42 பேரும், புதுக்கோட்டையில் 36 பேரும், தஞ்சாவூரில் 27 பேரும், கடலூரில் 17 பேரும், கிருஷ்ணகிரியில் 15 பேரும், திருவாரூரில் 13 பேரும், தர்மபுரியில் 14 பேரும், திருப்பத்தூர், நாமக்கல், அரியலூரில் தலா 12 பேரும், கரூர், நாகப்பட்டினம், திருப்பூரில் தலா 6 பேரும், திண்டுக்கலில் 5 பேரும், பெரம்பலூரில் இருவரும், நீலகிரியில் ஒருவரும் பாதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் அரியலூர், நீலகிரி, திருவாரூர், திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று முதல் கொரோனா உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பலி ஏற்பட்டு உள்ளது. இதுவரை உயிரிழந்தவர்கள் பட்டியலில் சென்னையில் 1,221 பேரும், செங்கல்பட்டில் 154 பேரும், திருவள்ளூரில் 122 பேரும், மதுரையில் 111 பேரும், காஞ்சீபுரத்தில் 46 பேரும், ராமநாதபுரத்தில் 32 பேரும், திருவண்ணாமலையில் 21 பேரும், விழுப்புரத்தில் 19 பேரும், தேனியில் 16 பேரும், திருச்சியில் 15 பேரும், ராணிப்பேட்டையில் 13 பேரும், விருதுநகரில் 12 பேரும், தூத்துக்குடி, சிவகங்கையில் தலா 11 பேரும், நெல்லையில் 10 பேரும், கோவை, திண்டுக்கல், புதுக்கோட்டையில் தலா 8 பேரும், சேலத்தில் 7 பேரும், கடலூர், ஈரோடு, வேலூரில் தலா 6 பேரும், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, தஞ்சாவூரில் தலா 5 பேரும், கிருஷ்ணகிரி, கரூரில் தலா 4 பேரும், திருப்பூரில் இருவரும், திருவாரூர், திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், நீலகிரி, நாமக்கல், நாகப்பட்டினம், தர்மபுரி, அரியலூர் மற்றும் விமான கண்காணிப்பில் தலா ஒருவரும் அடங்குவர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 561 பேரும், வெளி மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 406 பேரும், ரெயில் மூலம் வந்த 422 பேரும், சாலை மார்க்கமாக வந்த 2 ஆயிரத்து 854 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 4 ஆயிரத்து 277 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




Next Story