சென்னை விமான நிலையத்தில் ரூ.21 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.21 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
x

சென்னை விமான நிலையத்தில் ரூ.21 லட்சம் வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு பயணிகள் விமானம் புறப்பட தயாராகிக்கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் செல்ல வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது 2 பயணிகளை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் இருவரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் இருவரையும் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனா். அதில் அவர்கள் இருவரும் உள்ளாடைகளுக்குள் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலரை மறைத்து வைத்து கடத்திச்செல்ல முயன்றதை கண்டுபிடித்தனா். அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சத்து 89 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 2 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.


Next Story