செங்கல்பட்டு கால் டாக்சி டிரைவர் கொலை வழக்கு - 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது


செங்கல்பட்டு கால் டாக்சி டிரைவர் கொலை வழக்கு - 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x

செங்கல்பட்டு கால் டாக்சி டிரைவர் கொலை வழக்கில் 3 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் அடுத்த அரசன்கழனி பகுதியை சேர்ந்தவர் அர்ஜுன் (வயது 30). பா.ம.க. பிரமுகரான இவர் தனியார் கால் டாக்ஸியில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 25-ம் தேதி தாம்பரம் அடுத்த மெப்ஸ் பகுதியிலிருந்து செங்கல்பட்டு வரை ஓலா நிறுவனம் மூலம் இவரது கார் புக்கிங் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வாடிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டு வந்த கார் ஓட்டுனர் அர்ஜுனன் மர்ம நபர்களால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு வல்லம் பஸ் நிலையம் அருகே சடலமாக கிடந்தார்.

தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீசார் இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலிஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

இந்த வழக்கில் செங்கல்பட்டு தாலுகா போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து ஓலா கார் நிறுவனத்தில் புக்கிங் செய்த செல்போன் எண்ணை வைத்து பெரம்பலூர் மாவட்டம் கரியனூர் பகுதியைச் சேர்ந்த பிரசாத் (26), திருமூர்த்தி (22), கட்டிமுத்து (25) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய லோகநாதன் (25), பெரியசாமி என்கின்ற பிரசாந்த்(18) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் பிரசாந்த், கட்டிமுத்து, திருமூர்த்தி ஆகியோரை மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் பரிந்துரையின்பேரில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.


Next Story