அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 3 பேர் கைது

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாத்தூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்காதர் மற்றும் போலீசார் அழகாபுரி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு பட்டாசு ஆலையின் அருகில் ஆள் நடமாட்டம் இல்லாத பொது இடத்தில் இறவார்பட்டியை சேர்ந்த அண்ணாதுரை (வயது 51), மனோவா (43) உள்பட 3 பேர் உரிய அனுமதியின்றி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சரவெடிகளை தயார் செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சரவெடிகளை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





