அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 3 பேர் கைது


அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 3 பேர் கைது
x

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்

சாத்தூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்காதர் மற்றும் போலீசார் அழகாபுரி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு பட்டாசு ஆலையின் அருகில் ஆள் நடமாட்டம் இல்லாத பொது இடத்தில் இறவார்பட்டியை சேர்ந்த அண்ணாதுரை (வயது 51), மனோவா (43) உள்பட 3 பேர் உரிய அனுமதியின்றி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சரவெடிகளை தயார் செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சரவெடிகளை பறிமுதல் செய்தனர்.


Next Story