கடந்த மாதத்தில் மெட்ரோ ரெயிலில் 56 லட்சம் பேர் பயணம் - மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவிப்பு


கடந்த மாதத்தில் மெட்ரோ ரெயிலில் 56 லட்சம் பேர் பயணம் - மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவிப்பு
x

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை

மெட்ரோ ரெயில்களில் கடந்த ஆகஸ்டு மாதம் 56 லட்சத்து 66 ஆயிரத்து 231 பேர் பயணம் செய்துள்ளனர். ஜூலை மாதத்தை காட்டிலும் ஆகஸ்டு மாதத்தில் 3 லட்சத்து 48 ஆயிரத்து 572 பேர் அதிகமாக பயணித்துள்ளனர்.

அதிகபட்சமாக ஆகஸ்டு 28-ந்தேதி 2 லட்சத்து 20 ஆயிரத்து 898 பேர் பயணித்திருக்கின்றனர். மேலும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மெட்ரோ ரெயில்களில் கியூ.ஆர். குறியீடு மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் நபர்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது. அந்தவகையில் கடந்த ஆகஸ்டு மாதம் கியூ.ஆர். குறியீடு பயன்படுத்தி 17 லட்சத்து 95 ஆயிரத்து 601 பேரும், பயண அட்டை பயன்படுத்தி 34 லட்சத்து 42 ஆயித்து 151 பேரும் பயணம் செய்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story