இலங்கைத் தமிழர்கள் 7 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்


இலங்கைத் தமிழர்கள் 7 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்
x
தினத்தந்தி 27 Nov 2023 2:53 AM GMT (Updated: 27 Nov 2023 3:01 AM GMT)

இலங்கை மன்னார் பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படகு மூலம் தனுஷ்கோடி வந்துள்ளனர்.

தனுஷ்கோடி,

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கைத் தமிழர்கள் பலர் அங்கிருந்து சிறிய படகுகள் மூலம் தங்களது குடும்பத்தினரோடு கடலில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு தமிழகத்திற்கு அகதிகளாக வருகின்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் இலங்கை மன்னார் பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படகு மூலம் தனுஷ்கோடி வந்துள்ளனர்.

அகதிகளாக தஞ்சமடைந்த அவர்கள் 7 பேரையும் மரைன் போலீசார் மண்டபம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு 7 இலங்கைத் தமிழர்களும் மண்டபம் முகாமில் தங்க வைக்கபட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story