கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - தொழிலாளி சாவு


கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - தொழிலாளி சாவு
x

கும்மிடிப்பூண்டி அருகே டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர்

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா சாமியார் மடம் கிராமத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம். இவரது மகன் மணிகண்டன் (வயது 30). திருமணமாகாத இவர், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அதே திசையில் முன்னால் தண்ணீர் டேங்கருடன் சென்ற டிராக்டர் திடீர் பிரேக் போட்டதால் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் டேங்கரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story