வாலிபருக்கு அரிவாள் வெட்டு


வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 2 July 2023 6:48 PM GMT (Updated: 3 July 2023 10:52 AM GMT)

வள்ளியூர் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தை சேர்ந்த பெருமாள் மகன் பிபின் (வயது 23). அதே ஊரைச் சேர்ந்தவர் திரவியம் மகன் ஆனந்தன் (46). லோடு ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் தெற்கு கள்ளிகுளம் பஸ்நிறுத்தம் அருகே லோடு ஆட்டோவை ஓட்டிச் சென்ற போது பஸ்சை முந்திச் செல்ல முயன்றார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் பிபின் இடையூறாக வந்ததாக கூறி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆனந்தன் ஆட்டோவில் இருந்த அரிவாளால் பிபின் கையில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை தேடி வருகின்றனர்.


Next Story