ஆவடி அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி


ஆவடி அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி
x

ஆவடி அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியானார்.

சென்னை

அரியலூர் மாவட்டம் வங்குடி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 26). இவருடைய தம்பி ராஜ் (23). இவர்கள் இருவரும் ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளனர். அஜித்குமார், சென்னையில் ஒரு தனியார் மாலில் வேலை செய்து வந்தார். அவருடைய தம்பி ராஜ், ஆவடியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு அஜித்குமார், ஆவடி-அண்ணனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு அஜித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story