கத்தியுடன் பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது


கத்தியுடன் பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது
x

திருவிடைமருதூரில் கத்தியுடன் பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்;

கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் பிச்சை கட்டளை தெருவை சேர்ந்தவர் பகதூர். இவருடைய மகன் சரவணன்(வயது35). இவர் அனைத்துடையான் மண்டபம் அருகே பட்டாக்கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் அறிந்த திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சரவணனை கைது செய்தனர்.

1 More update

Next Story