சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு தடை - வனத்துறை


சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு தடை - வனத்துறை
x

வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மார்கழி மாத பிரதோஷம், பவுர்ணமிக்கு சதுரகிரி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு செல்ல மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமிக்கு சதுரகிரி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 4 நாட்களுக்கு பக்தர்கள் யாரும் தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வரவேண்டாம் என வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.


Next Story