சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்


சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்
x

சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு ரெயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை சென்ட்ரலில் இருந்து ரெயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று மதியம் சென்ட்ரலில் 3.10 க்கு புறப்பட வேண்டிய ரெயில், இரவு 8.20 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்ட்ரல்-ஹவுரா ரெயில் இன்று இரவு 7 மணிக்கு பதிலாக இரவு 8.30க்கு புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story