சென்னை மெட்ரோ ரெயில் சேவை 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்-மெட்ரோ நிர்வாகம் தகவல்


சென்னை மெட்ரோ ரெயில் சேவை 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்-மெட்ரோ நிர்வாகம் தகவல்
x

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டது. தற்போது மெட்ரோ ரெயிலில் ஏராளமானோர் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரெயில் நிர்வாகம் 7 நிமிட இடைவெளியில் ரெயில் சேவை வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மற்றும் அவர்களின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காகவும் 2 வழித்தடங்களிலும் நெரிசல் மிகு நேரங்கள் இல்லாது மற்ற நேரங்களில் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரெயில் சேவைகள் 27-ந் தேதி முதல் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மெட்ரோ ரெயில் பயணிகள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story