சென்னை: பேருந்தில் அரசு ஊழியரிடம் ரூ.5 லட்சம் கொள்ளை: போலீசார் விசாரணை


சென்னை: பேருந்தில் அரசு ஊழியரிடம் ரூ.5 லட்சம் கொள்ளை: போலீசார் விசாரணை
x

பணம் காணாமல் போனதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்த அவர், போலீசில் புகார் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை வேளச்சேரியில் ஓடும் பேருந்தில் அரசு ஊழியர் வசந்தி என்பரிடம் ரூ.5 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

வீடு கட்டுவதற்காக கடனாக பெட்ரா ரூ. 5 லட்சம் பணத்துடன் வசந்தி என்பவர் பேருந்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது தான் வைத்திருந்த பணம் காணாமல் போனதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக இதுகுறித்து அவர் போலீசில் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார், இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.


Next Story