சென்னையில் 93 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த மாநகராட்சி முடிவு


சென்னையில் 93 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த மாநகராட்சி முடிவு
x

கோப்புப்படம் 

தெரு நாய்களை வலை மூலம் பிடித்து, கால்நடை மருத்துவரால் தடுப்பூசிகள் போட முடிவு செய்யப்படுகிறது.

சென்னை,

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 93 ஆயிரம் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணியை நீக்குவதற்கான மருந்தையும் ஊசி மூலம் செலுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக தெரு நாய்களை வலை மூலம் பிடித்து, கால்நடை மருத்துவரால் தடுப்பூசிகள் போட முடிவு செய்யப்படுகிறது.

தடுப்பூசி போடப்பட்ட பின்னர், அதே தெருவில் தடுப்பூசி செலுத்திய நாய்களை அடையாளம் காணும் வகையில் அவைகளின் உடலில் ஒரு பகுதிகளில் வண்ணம் தீட்டவும் திட்டமிடப்பட்டு உள்ளது.


Next Story