மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்த ரெயில்வே ஊழியர் சாவு


மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்த ரெயில்வே ஊழியர் சாவு
x

மின்சார ரெயிலில் இருந்து தவறி விழுந்த ரெயில்வே ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு அடுத்த பெருமாள்பட்டு கணேஷ் நகரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 50). இவர் சென்னை எழும்பூர் ரெயில்வேயில் சிக்னல் டிசைனராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு யாமினி என்ற மகளும், ரிஷிகுமார் என்ற மகனும் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லக்கூடிய புறநகர் மின்சார ரெயிலில் ஏற முயன்றபோது தவறி பிளாட்பாரத்தில் விழுந்தார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story