ஆடிப்பூரம் விழா மற்றும் விடுமுறை தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்


ஆடிப்பூரம் விழா மற்றும் விடுமுறை தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்
x

ஆடிப்பூரம் விழா இன்று கொண்டாடப்படுவதையொட்டியும் மற்றும் விடுமுறை தினத்தையொட்டியும் திருத்தணி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் படையெடுத்தனர்.

திருவள்ளூர்

திருத்தணி,

திருத்தணி முருகன் கோவில்

ஆறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாகத் திகழும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடிப்பூரத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று காரணமாக இந்த திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் இந்தாண்டு திருவிழாவிற்கு அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், ஆடிப்பூரத் திருவிழாவில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிருந்து ஆயிரக்கணக்காண பக்தர்கள் திரண்டு வந்து காவடிகள் மற்றும் பால்குடங்கள் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள்.

படையெடுத்த பக்தர்கள்

இந்நிலையில் நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதாலும், நாளை ஆடிப்பூரத்தை முன்னிட்டும் காலை முதலே மலைக்கோவிலுக்கு வெளியூர்களிருந்து பக்தர்கள் சுற்றுலா பஸ்கள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் மலைக்கோவிலில் முகாமிட படையெடுத்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக முண்டியடித்து நெரிசலில் சிக்கியதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டனர். பாதுகாப்பு பணியில் குறைந்த அளவிலான போலீசார் மட்டுமே ஈடுபட்டிருந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் ஆடிப்பூரத் திருவிழாவில் அதிக அளவில் பக்தர்கள் முருகன் கோவிலுக்கு வருகை தருவார்கள் என்பதால் அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் விரைந்து தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story