நாளை மறுநாள் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்


நாளை மறுநாள் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
x

நாளை மறுநாள் (அக். 1-ம் தேதி) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள், தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனை கூட்டம் அக்டோபர் 1-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், அமைச்சர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் விவகாரம், தேர்தல் பணிகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்ததையடுத்து நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த சூழலில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


Next Story