அச்சரப்பாக்கம் அருகே கார் மோதி முதியவர் பலி


அச்சரப்பாக்கம் அருகே கார் மோதி முதியவர் பலி
x

அச்சரப்பாக்கம் அருகே கார் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அருகே உள்ள பள்ளிப்படை ஊராட்சி புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சடையப்பன் (வயது 75). இவர் நேற்று அந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக சடையப்பன் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த சடையப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். அச்சரப்பாக்கம் போலீசார் சடையப்பன் உடலை பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story