விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x

விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் லாடன் (வயது 54). விவசாயியான இவர் காலில் அடிபட்டு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த இவர் பூச்சி மருந்தை (விஷம்) குடித்தார். உடனே அவரை மீட்டு சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story